×

கோட்டூர் அருகே மூதாட்டியிடம் 7பவுன் செயின் பறித்தவர் கைது

மன்னார்குடி, டிச. 15: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல் சரகத்திற்குட்பட்ட சித்தேரி கிராமத் தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மனைவி சந்திரா (70). இவர் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியனின் மாமியார் ஆவார். இவர் சித்தேரி செல்வதற்காக அங்கிருந்த பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த வாலிபர் வீட்டில் இறக்கி விடுவதாக கூறியதை நம்பி அவருடன் சித்தேரி கிராமத்திற்கு பைக்கில் சென்றார்.தன் வீட்டு வாசலில் இறங்கி கொண்ட சந்திராவின் கழுத்தில் கிடந்த சுமார் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறி த்து கோட்டூர் காவல் நிலையத்தில் சந்திரா அளித்த புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் கழனியப்பன், சர்மிளா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டார்.இந்நிலையில் ஒருவர் பெருகவாழ்ந்தான் அருகே கெலுவத்தூர் கிராமத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரின் அங்கு விரைந்த தனிப்படை போலீசார் அந்த நபரை பிடித்து கோட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் அவர் பெருகவாழ்ந்தானை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் ஆனந்தன் (40) என்றும், கடந்த 7ம் தேதி சந்திராவிடம் 7 பவுன் தங்க செயினை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

Tags : Kottur ,
× RELATED குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி